பதவி ஏற்றுக் கொண்ட அத்தனை அமைச்சர்களுக்கும் கோட்டாபய பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

பதவி ஏற்றுக் கொண்ட அத்தனை அமைச்சர்களுக்கும் கோட்டாபய பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட நியமனங்களில் மாற்றங்களை செய்ய வேண்டுமாயின் அதற்காக ஜனாதிபதியிடம் முழுமையான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தர வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் நியமித்த விசேட குழுவின் மூலமே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளரது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.