நேற்றைய தினம் 9 பேருக்கு கொவிட்-19 தொற்று

நேற்றைய தினம் 9 பேருக்கு கொவிட்-19 தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், இந்தேனேஷியாவில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்த 880 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 29 பேர் நேற்றைய தினம் குணமடைந்துள்ளனர்.

இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 247 ஆக குறைவடைந்துள்ளது.