பிரதி சபாநாயகர் யார்? வெளிவந்த தகவல்

பிரதி சபாநாயகர் யார்? வெளிவந்த தகவல்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ஷசீந்திர ராஜபக்க்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

2020ஆம் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஷசீந்திர ராஜபக்க்ஷ அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்றார்.

ஏழாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்க்ஷவின் மகனே இவர். அத்துடன் ஊவா மாகாணசபையின் ஆறாவது முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.