முல்லைத்தீவு வைத்தியசாலையில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நோயாளர்கள்!

முல்லைத்தீவு வைத்தியசாலையில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நோயாளர்கள்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிப் புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்திய பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இதுவரை வைத்தியர்கள் நியமிக்கப்படாமையினால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமும் இது தொடர்பில் கோரிக்கை வைத்த போதும் இதுவரை வைத்திய பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாமை காரணமாக இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.