பேருந்து கட்டணங்களை முற்கொடுப்பனவு அட்டைகளின் மூலம் அறவீடு செய்யத் திட்டம்

பேருந்து கட்டணங்களை முற்கொடுப்பனவு அட்டைகளின் மூலம் அறவீடு செய்யத் திட்டம்

எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணங்களை முற்கொடுப்பனவு அட்டைகளின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று பணக் கொடுக்கல் வாங்கல்களின் போதும் ஏற்படும் என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று போக்குவரத்து செயற்பாடுகளின் போது இடம்பெறும் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது பரவக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

இதனால் கொடுக்கல் வாங்கல்களின் போது கூடியளவு, பணத்தைப் பயன்படுத்துவதனை தவிர்க்க முயற்சிப்பதாக தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த முற்கொடுப்பனவு அட்டை முறையை விரைவில் அறிமுகம் செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.