சற்று முன்னர் மேலும் 23 பேருக்கு கொரோனா...!

சற்று முன்னர் மேலும் 23 பேருக்கு கொரோனா...!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2844 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 23 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த 23 பேரும் சேனபுர மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2593 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனாவால் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.