ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மன்னாரில் விசேட கலந்துரையாடல்

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மன்னாரில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பாகவும், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடல் மன்னாரில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன் போது ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் மேற்பார்வை குழுவின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அதற்கான பொறுப்பு அதிகாரி மேஜர் மொஹான் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் , திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதம செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதன் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள 1830 பேருக்கான பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கான மேலதிக தகமைகளை வலுப்படுத்தல் தொடர்பாக வருகை தந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.