தபால் பெட்டிக்கு அருகில் சடலம் மீட்பு
தபால் பெட்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித் சடலம் களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் களுத்துறை வடக்கு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.