தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் ஆசனத்தை கஜேந்திரனுக்கு வழங்கத் தீர்மானம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் ஆசனத்தை கஜேந்திரனுக்கு வழங்கத் தீர்மானம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் ஆசனத்தை கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய குழு மற்றும் வடக்கு - கிழக்கு மாவட்ட மட்ட அமைப்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவர், தனது தேசிய பட்டியல் ஆசனத்தின் மூலம் வன்னி மற்றும் கிழக்கு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.