சொகுசு ஹொட்டல் கூட பாதுகாப்பில்லை ; தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்

சொகுசு ஹொட்டல் கூட பாதுகாப்பில்லை ; தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த தம்பதியர், அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் தனியுரிமை மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணியான ஒரு பெண்ணும் அவரது கணவரும், உதய்ப்பூரில் உள்ள ‘The Leela Palace’ ஹொட்டலில் நாளொன்றிற்கு 55,000 ரூபாய் வாடகையில் அறை ஒன்றை எடுத்துத் தங்கியிருந்தனர்.

சொகுசு ஹொட்டல் கூட பாதுகாப்பில்லை ; தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர் | Hotel Employee Peeks Into Couple S Bathroom

அவர்கள் இருவரும் குளியலறையில் இருந்த வேளையில், ஹொட்டல் ஊழியர் ஒருவர் மாற்றுச் சாவி பயன்படுத்தி அறைக்குள் நுழைந்ததாகவும், உள்ளே வரவேண்டாம் என சத்தமிட்ட போதிலும் அந்த ஊழியர் அறைக்குள் வந்ததுடன், குளியலறைத் துவாரம் வழியாக எட்டிப் பார்த்ததாகவும் தம்பதியர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தங்களின் தனியுரிமையை கடுமையாக மீறியதாகவும், அதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் கூறி, தம்பதியர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ஹொட்டலின் உரிமையாளர்களான Schloss Udaipur Private Limited நிறுவனம், தம்பதியருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஹொட்டல் அறை கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், வழக்கு செலவுக்காக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மொத்த தொகையையும் இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.