நிரம்பி வழியும் மகாவலி ஆறு! மறு அறிவித்தல் வரை மூடப்படும் வீதி

நிரம்பி வழியும் மகாவலி ஆறு! மறு அறிவித்தல் வரை மூடப்படும் வீதி

கனமழை காரணமாக மகாவலி ஆறு பெருக்கெடுத்து சோமாவதிய - சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (07) காலை 8.30 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

சோமாவதிய - சுங்காவில பிரதான வீதியானது திக்கல பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்றும், எதிர்காலத்தில் இந்த வீதியின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நேற்று (06) மாலை சோமாவதிய விகாரைக்கு வழிபாடுகளுக்காகச் சென்ற பக்தர்கள் சிலர் வெள்ளம் காரணமாகத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டதினையடுத்து, டிராக்டர் வண்டி மூலம் அவர்கள் பாதுகாப்பாக செல்ல விகாரையின் பிக்குகள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.