முதியோர் கொடுப்பனவு: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

முதியோர் கொடுப்பனவு: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், முதியோர் உதவித்தொகை கொடுப்பனவு, இன்று (18.12.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது. 

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் இன்று (18) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது. 

முதியோர் கொடுப்பனவு: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம் | Senior Citizens Aswesuma Allowance Credit To Bank

மேலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவைப் பெற்றிருந்ததோடு, இதற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் (3 பில்லியனுக்கும் அதிக) அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.