நடு வீதியில் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

நடு வீதியில் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

கண்டி, ஹரகம வீதியில் குருதெனிய பகுதியில்  ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (13) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடு வீதியில் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை | Couple S Tragedy Strikes On Main Road

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஹாரகமவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களை ஏற்றிச் சென்ற வேன், சாலையில் எதிர் திசையில் திரும்பியபோது, ​​பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் தலத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.