வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்..

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்..

சமீபத்திய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அபிவிருத்தி பணியகம் கவலை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் தூக்கமின்மை, நீண்டகால மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக ஆலோசகரும் மனநல மருத்துவருமான விந்தியா விஜயபண்டார குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தத்தின்போது ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக, பதட்டம், மனச்சோர்வு மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (PTSD) போன்ற நிலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்.. | Mental Health Issues After Floods

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு உள சமூக ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக மனநலக் குழுக்களை சுகாதார அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.

பேரிடர் நிவாரணத்தின் அடுத்த கட்டமானது உணவு மற்றும் தங்குமிடத்திற்கு அப்பால், உயிர் பிழைத்தவர்களுக்கு நீண்டகால மனநலப் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிவாரண மையங்களில் பாதுகாப்பான இடங்களை உருவாக்குதல் மற்றும் நீண்டகால உளவியல் சிக்கல்களைத் தடுப்பதற்காகத் தொடர்ச்சியான பின்தொடர்தல் பராமரிப்பின் அவசியம் குறித்தும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்.. | Mental Health Issues After Floods

மனநல உதவி அல்லது ஆதரவு தேவைப்படும் ஒருவருக்காக, இலங்கை தேசிய மனநல நிறுவனத்தின் உதவி தொலைபேசி இலக்கமான 1926 ஐப் பயன்படுத்தலாம்.