இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Thunderstorm Warning Issued In These Areas

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மக்கள், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அறிவுறுத்தியுள்ளது.