முக்கிய பாலங்களை புனரமைக்க குறைந்தது ஒன்றரை ஆண்டுகள்
நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்த முக்கிய பாலங்களை புனரமைக்க குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேவெளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட A மற்றும் B தர வீதிகள் மூன்று மாதங்களுக்குள் புனரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கை பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியா உளட பல்வேறு நாடுகளும் நிவாரணங்களை அனுப்பி உதவி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.