சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 25,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மாதத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4,389 ஆகும்.

குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜெர்மனியிலிருந்து 3,421 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருற்து 2,882 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,559 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | 25000 Tourists Arrive Amidst Post Cyclone Ditwah

 அவுஸ்திரேலியாவிலிருந்து 1,160 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,327 சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 975 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 28 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.