வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்

வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம் | Weather Changes In The Next 48 Hours

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.