அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு

அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (02.12.2025) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால் குறித்த பகுதி கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.