தமிழர் பகுதியில் கொடூரம் : குடும்பஸ்தர் கொலை - சந்தேக நபர்கள் கைது

தமிழர் பகுதியில் கொடூரம் : குடும்பஸ்தர் கொலை - சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு(24.11.2025) இடம்பெற்றுள்ளது.

56 வயதுடைய கதிரவேலு சிவராசலிங்கம் என்கின்ற குடும்பஸ்தரே குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் நேற்றிரவு(24.11.2025) கொலை செய்யப்பட்டவரின் மருமகன், மருமகனின் சிறிய தந்தை இணைந்து தாக்குதலை நடாத்தி  தலைமறைவாகி இருந்துள்ளனர்.

தமிழர் பகுதியில் கொடூரம் : குடும்பஸ்தர் கொலை - சந்தேக நபர்கள் கைது | Kilinochchi Murder Case

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இருவரும் அக்கராயன் பிரதேச பொலிஸாரல் இரவு 11 மணியளவில் முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.