உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் : சிஐடியில் முறைப்பாடு

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் : சிஐடியில் முறைப்பாடு

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் : சிஐடியில் முறைப்பாடு | 2025 A L Exam Question Paper Leak Complaint In Cid

இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.