சீரற்ற காலநிலை: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சீரற்ற காலநிலையால் பாதிப்பிற்கு உள்ளான பகுதி மாணவர்களுக்கு விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும்போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சை காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல உதவுவதற்காக இடர் முகாமைத்துவ நிலையம் பல படகுகளை நிறுத்தியுள்ளது.
அதன்படி, தற்போது இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.