வெளிநாட்டு பயணியிடம் ஹோட்டல் பணியாளரின் மோசமான செயல்

வெளிநாட்டு பயணியிடம் ஹோட்டல் பணியாளரின் மோசமான செயல்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் பணியாளர் கோட்டை பொலிஸாரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோட்டல் ஒன்றின் சிறப்பு விருந்தினர் அறையில் வைத்திருந்த தனது பணப்பையிலிருந்து இலங்கை பணத்தில் சுமார் 330,000 ரூபாய் பெறுமதியுடைய திர்ஹம்கள் மற்றும் யூரோக்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

வெளிநாட்டு பயணியிடம் ஹோட்டல் பணியாளரின் மோசமான செயல் | Hotel Employee Bad Behavior Foreign Traveler

இந்த திருட்டு சம்பவம் கடந்த 11ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹோட்டலில் பணிபுரிந்த கந்தானை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று, (14) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.