இந்த மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (27)  போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சி தகவல் | Two Lakh Students Use Drugs

மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

தென் மாகாணத்தைப் பற்றிப் பேசினால், இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது.

இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் ஆவர். அதில் அதிகமானவர்கள் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படுகின்றனர் என தெரிவித்தார்.