வெளிநாடுகளிலிருந்து 200 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

வெளிநாடுகளிலிருந்து 200 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 202 இலங்கையர்கள் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான தேசிய மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

இதற்கமைவாக  இந்தியாவிலிருந்து UL 1160 எனும் விமானத்தினூடாக 164 பேரும் doha கட்டாரிலிருந்து QR 668 விமானத்தின் மூலம் 17 பயணிகளும் 6E 9035 எனும் விமானத்தின் மூலம் சென்னையிலிருந்து 19 பயணிகளும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

மேலும்  துபாயிலிருந்து UL 1042 விமானத்தின் மூலம் இரண்டு பேரும் இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர்

இவ்வாறு அழைத்து வரப்பட்ட 202 இலங்கையர்களும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

இதேவேளை இலங்கை பிரஜைகளை அழைத்து வரும் பணியில் இன்று மாலை மாலைத்திவிலிருந்து 187 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது