
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.
அதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் (14) ஒப்பிடும்போது இன்றைய தினம் (15) 5,000 ரூபாவினால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 342,300 ரூபாவாக உயர்ந்துள்ளது.
நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக விற்னபனை நெய்யப்பட்டது.
இதற்கிடையில், நேற்று (14) 365,000 ரூபாவாக இருந்த கரட் ஒரு பவுன் தங்கத்தி விலை, இன்று (15) 370,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.