
3 மாதங்களுக்கு மின் கட்டண திருத்தம் இல்லை - மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணங்களில் திருத்தம் இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது PUCSL இன் தலைவர் கே.பி.எல். சந்திரலால் வெளியிட்டுள்ளார்.
இன்று (14) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.