உயர் தரத்தில் கற்கும் மாணவர்கள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

உயர் தரத்தில் கற்கும் மாணவர்கள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

நாட்டில் உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.

உயர் தரத்தில் கற்கும் மாணவர்கள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் | Information Regarding Students Studying High Level

இன்றைய உலக மனநல தினத்தை முன்னிட்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பேராசிரியர் மியுரு சந்திரதாச இவ்வாறு தெரிவித்தார்.

கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணங்கள் என்பதை இந்த மனநல சோதனை கண்டறிந்துள்ளது.

இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது என்பதையும் அவர் தெரிவித்தார்.