இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த செப்டெம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து, 6.243 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் மொத்த ஒதுக்கம் 6.178 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

இந்த மொத்த ஒதுக்கீட்டில், சீன மக்கள் வங்கியின் நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்குகின்றன.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு | Sri Lanka S Official Reserve Assets Increase

சீன நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் உள்ள இந்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி, பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஒதுக்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் அல்லது அரசாங்கத்தால் பராமரிக்கப்படும், அந்நிய செலாவணி இருப்புகளின் அளவைக் குறிக்கிறது.

இது இறக்குமதிகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற வெளிநாட்டு கொடுப்பனவுகளைச் செய்வதற்கான நாட்டின் திறனைக் காட்டுகிறது.