அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (13.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Heavy Rain With Thunder Weather For Next 36 Hrs

அத்துடன், சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.