
எல்ல விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்த பயணிகள்; சோகத்தில் முடிந்த பயணம்
இலங்கையில் நேற்றிரவு நடந்த துயரமான பேருந்து விபத்துக்கு சற்று முன்பு எல்லவில் எடுக்கப்பட்ட தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களின் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
எல்லவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு சுமார் 30 பேர் கொண்ட குழு ஒன்றாக போஸ் கொடுப்பதை படங்கள் காட்டுகின்றன.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்கள் பயணித்த தனியார் பேருந்து எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அவர்களின் சுற்றுலா சோகத்தில் முடிந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.