
இளவயது கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி
களுத்துறையில் குடும்ப தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் வீடு திரும்பும் போது மனைவி வேறு ஓருவருடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட நபருடன் மனைவி தப்பி சென்றுள்ளதாக 23 வயதுடைய கணவன் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 27 ஆம் திகதி வெளியில் சென்று திரும்பிய போது, அவரது மனைவி வேறொரு நபருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தமையினால் கணவன் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதன் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ள விஷம் அருந்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்கு நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.
மனைவி வீட்டிலிருந்து பணம், தங்க நகைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்களை லொறியில் ஏற்றிக்கொண்டு அயல் வீட்டு நபருடன் தப்பி சென்றுள்ளார்.
தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கணவனுக்கு குறுந்தகவல் ஒன்றையும் மனைவி அனுப்பியுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.