இலங்கையில் புதிதாக தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க முடிவு

இலங்கையில் புதிதாக தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க முடிவு

இலங்கையில் பலவீனமான தொலைத்தொடர்பு இணைப்புகள் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 100 தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் பலவீனமான சமிக்ஞை பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காகத் தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் புதிதாக தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க முடிவு | New Telecom Towers To Be Built In Sri Lankaஒரு தகவல் தொடர்பு கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான செலவில் 75 வீதம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவால் ஏற்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.