கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி

கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி

கொழும்பு மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி | Dies After Being Hit High Speed Train Kalutara

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகாத நிலையில் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.