இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இரத்தினபுரியில் பெண் ஒருவர் தங்க சங்கிலிக்காக கொலை செய்யப்பட்டதாக வெளியான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவன் அதிர்ச்சிகரமான தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

குருவிட்ட, தேவிபஹல பகுதியில் 26 வயதுடை பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 17 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் சிறிது காலமாக அந்தப் பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவர் தொடர்ந்து நிராகரித்ததால் தான் அவரை கொலை செய்துள்ளதாக சிறுவன் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருவிட்ட, தேவிபஹல பகுதியைச் சேர்ந்த 26 வயது ஷானிகா மதுஷானி, வேலை முடிந்து திரும்பும் போது கடந்த 2 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள் | Women Killed Shocking Information About Incident

பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம் போட்டமையால் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் பயணித்த வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது, மேலும் அவர் கழுத்து வெட்டி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது தங்க சங்கிலி, கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவையும் திருடப்பட்டன.

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள் | Women Killed Shocking Information About Incident

கைது செய்யப்பட்ட 17 வயது சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.