இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி (Kandy), காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (4.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Todays Weather Heavy Rain With Thunderstorms

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக தீவிர காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்களை குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.