செல்வச் சன்னதியில் இருந்து சென்ற பாதயாத்திரீகர் கதிர்காமத்தில் திடீர் மரணம்

செல்வச் சன்னதியில் இருந்து சென்ற பாதயாத்திரீகர் கதிர்காமத்தில் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் கதிர்காமத்தில் திடீரென வெள்ளிக்கிழமை (27) மரணமானார்.

புத்தளம் உடப்பை சேர்ந்த 52 வயதுடையவரே  என்பவரே இவ்வாறு திடீரென மரணமடைந்துள்ளார்.

செல்வச் சன்னதியில் இருந்து சென்ற பாதயாத்திரீகர் கதிர்காமத்தில் திடீர் மரணம் | Pilgrim From Selva Sannidhi Dies In Kataragamaஇவர் கடந்த மே மாதம் 01 ஆம் திகதி உடப்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிக்கு வந்து 56 நாள் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர் என பாதயாத்திரை குழுத் தலைவர்  தெரிவித்தார்.

அவர் பாதயாத்திரை செல்வது மூன்றாவது தடவை ஆகும். இம்முறை கதிர்காமத்தை வந்தடைந்த போது அவரது மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பஸ்ஸில் கதிர்காமம் வந்தனர்.

குடும்பத்தினர் சகிதம் கதிர்காமம் ஆலயத்துக்குள் வௌ்ளிக்கிழமை (27) காலை 11 மணியளவில் பிரவேசித்த பொழுது திடீரென சரிந்து விழுந்தார்.

மறுகணம் அவரை கதிர்காமம் வைத்தியசாலைக்கு  கொண்டு சேர்த்தனர் . அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், அவரது சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.