பிரபல பாடசாலையில் ஆசிரியரின் கொடூரம்; மாணவனுக்கு நேர்ந்த கதி

பிரபல பாடசாலையில் ஆசிரியரின் கொடூரம்; மாணவனுக்கு நேர்ந்த கதி

கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் தொழில்நுட்பத் துறையில் 13 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ல சம்பவம் அதுஇர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் , நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இன்று (26) அன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிரபல பாடசாலையில் ஆசிரியரின் கொடூரம்; மாணவனுக்கு நேர்ந்த கதி | Ginigathhena Teacher Brutally Attacked Student

மாணவன் இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை (23) அன்று பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போது ​​பாட ஆசிரியர் தன்னிடம் வந்து தனது குறிப்பேடுகளை கேட்டபோது , மாணவன் தான் பிரத்தியேக வகுப்புகளில் இருந்து எடுத்த குறிப்புகளைக் காட்டியுள்ளார்.

பிரபல பாடசாலையில் ஆசிரியரின் கொடூரம்; மாணவனுக்கு நேர்ந்த கதி | Ginigathhena Teacher Brutally Attacked Student

இதன் காரணமாக கோபமுற்ற ஆசிரியர் அந்த புத்தகத்தை கிழித்து முகத்தில் பலமுறை தாக்கியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது, ​​அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில், கினிகத்தேன பொலிஸ் நிலையத்தின் அருகே வந்து, தன்னை வலுக்கட்டாயமாக பாடசாலைக்கு அழைத்துச் சென்று, சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாகவும் மாணவன் கூறியுள்ளார்.

அதேவேளை ஆசிரிய தாக்கியதில் தனக்கு காது கேளாமை இருப்பதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் அதிபர் , பல மாதங்களாக பாடசாலைக்கு செல்லாததால், ஆசிரியர் குறித்த மாணவன் உட்பட சில மாணவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல பாடசாலையில் ஆசிரியரின் கொடூரம்; மாணவனுக்கு நேர்ந்த கதி | Ginigathhena Teacher Brutally Attacked Student

அதேவேளை கினிகத்ஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் , ​​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தான் தாக்கப்பட்டதாகக் கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான பதிவை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிலையில் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் பொலிஸார் , பாதிக்கப்பட்ட மாணவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து சம்பவம் குறித்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.