தமிழர் பகுதியில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த இருவர்

தமிழர் பகுதியில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த இருவர்

மட்டக்களப்பு (Batticaloa) - ஏறாவூர் காவல்துறை பிரிவில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றை (23.06.2025) இடம்பெற்றுள்ளது.

வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி அருகிலுள்ள பனை மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய் , கருவப்பங்கேணி, நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழர் பகுதியில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த இருவர் | 15 Year Old Girl Died Horrific Accident In Jaffna

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் தனது மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

இதன்போது, அதிகாலை 3.00 மணியளவில் சாரதியுடன் பயணித்தபோது கார் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.