எரிபொருளை பதுக்கி வைக்கவேண்டாம்

எரிபொருளை பதுக்கி வைக்கவேண்டாம்

எரிபொருள் தட்டுபாடு ஏற்படலாம் என பொதுமக்கள் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.

எரிபொருளை பதுக்கி வைக்கவேண்டாம் | Do Not Hoard Fuel There Will Be No Shortageஇவ்வாறான போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

அதோடு இது எங்களுடைய பிரச்சினை அல்ல என்றும், உலகின் சக்திவாய்ந்தவர்களின் பிரச்சினை என தெரிவித்த அவர், அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.