
யாழ் பிரபல ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தேர்த்திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்த வேளை பக்தர்கள் மத்தியில் புகுந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சங்கிலி அறுத்தவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.