மீண்டும் வானிலையில் மாற்றம் ; கொட்டி தீர்க்க போகும் கனமழை

மீண்டும் வானிலையில் மாற்றம் ; கொட்டி தீர்க்க போகும் கனமழை

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவித்தலை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் வானிலையில் மாற்றம் ; கொட்டி தீர்க்க போகும் கனமழை | Weather Changes Again Heavy Rain Expected

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என்றும் வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.