12 மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நடத்த தீர்மானம்

12 மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நடத்த தீர்மானம்

பன்னிரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி தேர்தல் ஒத்திகை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் நோக்கில், இந்த ஒத்திகை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை, களுத்துறை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் போது வாக்களிப்பு நிலையங்களில் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என சமன்சிறி ரத்னாயக்க தெரிவித்தார்.

சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமிநாசினிகளை பயன்படுத்துதல், தேசிய அடையாள அட்டைகளை கையில் தொடாது பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதலும் ஒத்திகையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலாங்கொடையில் பொதுத் தேர்தலுக்கான முதல் ஒத்திகை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.