முதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்? வெளிவந்தது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்? வெளிவந்தது அறிவிப்பு

இன்று நடைபெற்று முடிந்த ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலின் முதலாவது முடிவு நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகும்

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி முழுமையாக வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணிக்கு நிறைவுக்கு வந்தது.இதனையடுத்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிற்பகல் 2.30 மணிக்கு முதலாவது முடிவு வெளியிடப்படும் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.