
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு : வெளியான அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examination) தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை 1066 மதிப்பீட்டு மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணகளில் 16,000 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.