ஸ்ரீலங்கா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள துப்பாக்கிகள்!

ஸ்ரீலங்கா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள துப்பாக்கிகள்!

ஸ்ரீலங்காவிலுள்ள சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், வெலிக்கட , மெகசின் , கொழும்பு ரிமான்ட் , நீர்கொழும்பு , புஸ்ஸ மற்றும் அகுனுகொலபொலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கே துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிர் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் 9 மில்லிமீற்றர் ரக கை துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.