சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்தும் புகையிரத சேவை ஆரம்பம்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்தும் புகையிரத சேவை ஆரம்பம்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரதசேவை இன்று இடம்பெற்றது.

யாழில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி வவுனியாவில் இருந்து இன்று காலை 8.10மணியளவில் கொழும்பு நோக்கி சென்றது.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிபயணிகள் ஏற்றப்பட்டதுடன் புகையிரத நிலையத்தில் சமூக இடைவெளியும் பேணப்பட்டது.

வவுனியா புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதாரநடைமுறைகள் தொடர்பில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர்.

மார்ச் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும்புகையிரத சேவை வடக்கில் இன்றைய தினமே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.