வவுனியா மாவட்ட செயலத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

வவுனியா மாவட்ட செயலத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

வவுனியா மாவட்ட செயலத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விசேட ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் பணிகளுக்காக மின்விளக்குகள் பொருத்துதல் மற்றும் ஏனைய மின்சார வசதிகள் என்பன பூர்த்தியடைந்துள்ளன.

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளதுடன் , உத்தியோகத்தர்கள் அனைவரும் இங்கிருந்து அவர்களது  வாக்குசாவடிகளுக்கு கடமைக்கு செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்கெண்ணும் நிலையமாகவும் வவுனியா மாவட்ட செயலகம் காணப்படுவதால் மாவட்ட செயலகத்தினுள் 70 இற்கு மேற்பட்ட விசேட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய மின்சார வசதிகளும் பொருத்தும் நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.

மேலும் நாளையதினம் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்வதற்குரிய ஆயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது