ஸ்ரீலங்காவில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான தகவல்
ஸ்ரீலங்காவில் கையடக்கத் தொலைபேசிக்கு தட்டுபாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசி இறக்குமதி நிறுவனங்கள் இந்த தகவலை தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்காவில் கொவிட் தொற்று அதிகரித்தமையின் பின்னணியிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைபேசிகளின் இறக்குமதியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீலங்காவில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு கேள்விகள் அதிகரித்துள்ளமையால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.