ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கை செலுத்தினார் நாமல்

ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கை செலுத்தினார் நாமல்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கினை செலுத்தியுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலானது 38 வேட்பாளர்களுடன் நாடளாவிய ரீதியில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது இன்று (21) காலை ஏழு மணியிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

இதனடிப்படையில், மக்கள் உட்பட அரசியல் வட்டாரங்களில் உள்ளவர்களும் தமது வாக்கினை செலுத்தி வரும் வரிசையில் தற்போது நாமல் ராஜபக்ச வாக்கினை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

 

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் வாக்களித்தோம், இப்போது உங்கள் முறை, வெளியே சென்று உங்கள் குரலைக் கேட்கச் செய்யுங்கள்.

அத்தோடு, ஒவ்வொரு வாக்கும் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது” என அவர் தெரிவித்துள்ளார்.